ஆலமரத்துக்கு 101வது பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்கள்

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடியிருக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

புயல், வெள்ளம், இடி என எத்தனையோ இயற்கைச் சீற்றங்களையும் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பிரச்சினைகளையும் சந்தித்து, சாதித்து கம்பீரமாக இருக்கும் அந்த மரத்துக்கு கடந்த ஆண்டு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நூற்றாண்டைக் கடந்துவிட்டதால் இந்த 101வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 23 அன்று நடப்பட்டதாக கூறப்படும் அந்த ஆலமரத்தை மின் விளக்குகளால் அலங்கரித்த அப்பகுதியினர் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். கொரோனா மற்றும் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நீர்நிலை இயக்கம், பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.

சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!