சென்னை: வெளிநாடுகளில் இருந்து 5 சிறப்பு விமானங்களில் 873 பேர் சென்னை வந்தனர்
மஸ்கட்டில் சிக்கித் தவித்த 14 பெண்கள் உள்பட 183 பேரும் கத்தாரில் இருந்து 10 குழந்தைகள், 63 பெண்கள் உள்பட 177 பேரும் குவைத்தில் இருந்து 6 குழந்தைகள், 14 பெண்கள் உள்பட 173 பேரும் சார்ஜாவில் இருந்து இரு விமானங்களில் 17 குழந்தை கள், 82 பெண்கள் உள்பட 340 பேரும் என ஆக மொத்தம் 873 பேர் 5 சிறப்பு விமானங்கள் முலம் சென்னை வந்தனர். கொரோனா பரிசோதனை முடிந்தபின்னர் தனிமைப்படுத்தப்படும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.