இரு லட்சத்தை நெருங்க உள்ள கிருமி பாதிப்பு

இரு லட்சத்தை நெருங்க உள்ள கிருமி பாதிப்பு

1 mins read
70ad792e-b3e1-4979-86bb-6300156106c8
பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச அரிசி, பருப்பு போன்ற சமையலுக்குத் தேவையான பொருட்களை குழந்தைகள், தங்கள் பள்ளிகளில் இருந்து பெற்றுக்கொண்டு செல்கின்றனர். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று பரவியிருப்பது உறுதியானது. இது இதுவரை இல்லாத புதிய உச்ச அளவு என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 192,964ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் இதுவரை மொத்தம் 21.57 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இவர்களில் 192,964 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களில் பலரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

136,000 போ் குணம்

இத்தொற்றிலிருந்து மேலும் 5,210 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 136,793 ஆக அதிகரித்துள் ளது. இதுவரை 70.89% பேர் குணமடைந்துள்ளனர்.

பரிசோதனைகள் அதிகரிப்பு:

நேற்று முன்தினம் மட்டும் 60,375 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பைக் கண்டறிய பரவலாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.