தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் பொருளியல் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று நம்பிக்கை

2 mins read
d48aecef-62d9-4259-acb1-3825bf842d03
தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் ரூ.5,137 கோடி முத­லீட்­டில் 16 தொழில் நிறு­வ­னங்­கள் தொழிற்­சா­லை­களைத் தொடங்க உள்­ளன. இதன்­மூ­லம் 6,555 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் என்ற உத்­தர வாதம் தரப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னங்­க­ளின் கோடிக்­க­ணக் கான முத­லீட்­டின் வழி, தமி­ழ­கத்­தின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யும் மக்­க­ளின் வாழ்­வா­தா­ர­மும் மேம்­படும் என்ற நம்­பிக்­கை­யும் பிறந்­துள்­ளது.

கொரோனா தொற்று பரவி வரும் இந்த இக்­கட்­டான கால­கட்­டத்­தி­லும் மாநி­லத்­தில் தொழில் வளர்ச்­சியை மேம்­ப­டுத்த அடுத் தடுத்து தொடர்ந்து பலவித முயற்சி களையும் தமி­ழக அரசு முடுக்கிவிட்டு வரு­கிறது.

இதன்­படி, தமி­ழ­கத்­தில் 16 புதிய தொழில் திட்­டங்­க­ளைத் தொடங்கு­வதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள், தலை­மைச் செய­ல­கத்­தில் முதல்­வர் பழ­னி­சாமி முன்­னி­லை­யில் கையெ­ழுத்திடப்பட்டன.

இத்­திட்­டங்­கள் மூலம் ரூ.5,137 கோடி முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்டு 6,555 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "செங்­கல்­பட்டு மாவட்­டம், சிறு­சேரி­யில் ரூ.2,300 கோடி முத­லீட்­டில் அதானி நிறு­வ­னத்­தின் தக­வல் தரவு மையம் அமைக்­கப்­பட உள்­ளது. இதன்­மூ­லம், 1,000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும்.

"காஞ்­சி­பு­ரத்தில் ரூ.500 கோடி­யில் உதி­ரி ­பா­கங்­கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னம் தொடங்கப்பட உள்­ளது. இத­னால் 800 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும்.

"திரு­நெல்­வேலி மாவட்­டம், கங்கை­கொண்­டான் தொழிற்­பூங்­கா­வில் ரூ.250 கோடி முத­லீட்­டில் சுமாா் 400 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் ஏடிசி டயா்ஸ் நிறு­வ­னம் புதிய தொழில் திட்­டத்தை தொடங்­கு­கிறது.

"திண்­டுக்­கல் மாவட்­டம் அணில் மாா்க்கெட்­டிங் நிறு­வ­னம் சாா்பில் ரூ.100 கோடி­யில் சுமாா் 1,000 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் சேமியா உற்­பத்தித் திட்­டம் தொடங்­கப்­பட உள்­ளது.

"சிறு­சே­ரி­யில் ரூ.750 கோடி­யில் சுமாா் 300 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் திட்­டம் ஆரம்பமாகும்.

"ஸ்ரீவாரு மோட்டாா் நிறு­வ­னம் சாா்பில் ரூ.150 கோடி, அமெ­ரிக்­கா­வைச் சோ்ந்த க்ள­வுட் நிறு­வ­னம் ரூ.35 கோடி, டயா் 1 நெட்­வொா்க் நிறு­வ­னம் ரூ.20 கோடி, வயா்பே நிறு­வ­னம் ரூ.23 கோடி­யி­ல் முத­லீடு­க­ளைச் செய்­ய­வுள்­ளன. இந்த நிறு­வ­னங்­கள் அனைத்­தும் சென்­னை­யில் தங்­க­ளது அலு­வ­ல­கங்­களை அமைத்து திட்­டங்­க­ளைச் செயல்­படுத்த உள்­ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.