இருவரின் மூலம் 220 பேருக்கு பரவிய கிருமி: 140 பேர் குணம்

இருவரின் மூலம் 220 பேருக்கு பரவிய கிருமி: 140 பேர் குணம்

1 mins read
a5cbd97d-dafe-4b33-b911-fa5437ef6053
நீலகிரி மாவட்டத்தில் இதுவரையில் 339 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்று அங்கு வேகமாகப் பரவுவதையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யா, முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார் . படம்: ஊடகம் -

மஞ்­சூர்: நீல­கிரி மாவட்­டம், மஞ்­சூர் அருகே தங்­காடு ஓர­நள்ளி கிரா மத்­தில் நடந்த திரு­மண நிகழ்வு ஒன்­றில் விதி­களை மீறி அதிக மானோர் கலந்துகொண்டனர்.

இந்த திரு­ம­ணத்தில் பெங்­க­ளூ­ரி­லி­ருந்து வந்த இளை­ஞர் ஒருவரும் கொேரானா தொற்­று­டன் பங்கேற் றுள்ளார். அவர் மூலம் 105 பேருக்கு தொற்று பர­வி­யது.

சுகா­தா­ரத் துறை­யி­னர் இத்­திரு மணத்­து­டன் சம்பந்தப்பட்ட ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட மக்களின் சளி மாதி­ரியைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­னர்.

அதே­போல், எல்­ல­நள்ளி ஊசி தொழிற்­சா­லை­யில் மக்­கள் தொடர்பு அலு­வ­லர் ஒரு­வ­ரால் தொற்று பரவியுள்ளது.

ஊசி தொழிற்சாலையில் பணி­பு­ரி­யும் 750 ஊழி­யர்­களைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தியதில் 115 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

காய்ச்­சல், சளி­யால் பாதிக்­கப்­பட்­டவர்கள் மருத்­து­வம­னையில் பரிசோதனைக்கு சென்றபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்­யப்­பட்­டது.

இந்த இரு சம்­ப­வங்கள் மூலம் 220 பேருக்கு தொற்று ஏற்­பட்­டது. சிகிச்­சைக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் 140 பேர் குண­மடைந்து வீடு திரும்­பி­னர்.