திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சுப்புராவ் (வயது 92). இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஹேமா (88). இணைபிரியா தம்பதியான இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் ஹேமா திடீரென்று இறந்தார்.
மனைவி இறந்ததை அறிந்து சுப்புராவ் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் தாங்க முடியாத சோகத்தில் உறைந்திருந்த சுப்புராவின் உயிர், தமது மனைவி இறந்த 1½ மணி நேரத்தில், மாலை 6 மணியளவில் திடீரென்று பிரிந் தது.

