தளர்வில்லா ஊரடங்கு: வெறிச்சோடியது சென்னை விமான நிலையம்

தளர்வில்லா ஊரடங்கு: வெறிச்சோடியது சென்னை விமான நிலையம்

2 mins read
66300691-572e-4913-bb87-1ccb14402c8b
கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: ஊர­டங்கு நீடித்து வரு­வ­தால் தமி­ழ­கத்­தில் விமான பய­ணம் மேற்­கொள்­ளும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து சரிந்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் தளர்வு­கள் இல்­லாத முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­ட­தால் சென்னை விமான நிலை­யம் வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டது.

நடப்பு ஜூலை மாதத்­தின் நான்­கா­வது ஞாயிற்­றுக்­கி­ழமை என்­ப­தால் நேற்று முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்டது.

இத­னால் சென்னை உள்­ளிட்ட அனைத்து முக்­கிய நக­ரங்­க­ளி­லும் போக்­கு­வ­ரத்து முடங்­கி­யது. முக்கிய சாலை­களில் வாக­னங்­களை அறவே காண முடி­ய­வில்லை.

சென்னை விமான நிலை­யத்­தின் உள்­நாட்டு முனை­யத்­தில் சுமார் 6 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மான பயணி­கள் தின­மும் காணப்­ப­டு­வர். ஆனால் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று சுமார் 4,600 பய­ணி­கள் மட்­டுமே பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

சென்­னை­யில் இருந்து பல்­வேறு நக­ரங்­க­ளுக்கு 29 விமா­னங்­கள் இயக்­கப்­பட்­டன. இதில் சுமார் 2 ஆயி­ரம் பேர் மட்­டுமே பய­ணம் செய்­த­தா­கத் தெரி­கிறது.

இதே­போல் பிற நக­ரங்­களில் இருந்து சென்னை வந்­த­டைந்த 29 விமா­னங்­களில் சுமார் 2,600 பேர் மட்­டுமே பய­ணம் செய்­த­னர்.

இத­னால் பய­ணி­கள் கூட்­டம் இன்றி விமான நிலை­ய­மும் வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டது.

இதற்­கி­டையே சிங்­கப்­பூர், உக்ரைன், இலங்கை ஆகிய மூன்று நாடு­களில் இருந்து 351 பேர் சிறப்பு விமா­னங்­கள் மூலம் சென்னை வந்­த­டைந்­த­னர்.

கொரோனா ஊர­டங்கு காரண­மாக பல்­வேறு நாடு­களில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை தாய­கம் அழைத்து வர மத்­திய அர­சின் ஏற்­பாட்­டில் சிறப்பு விமா­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. இத்­திட்­டத்­துக்கு வந்தே பாரத் எனப் பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஐந்து குழந்தைகள், 37 பெண்கள் உட்பட 177 பேர் சென்னை திரும்பினர்.

இதேபோல் உக்ரைனில் இருந்து 150 பேரும், இலங்கையில் இருந்து 24 பேரும் சென்னை திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.