கொவிட்-19: பலி எண்ணிக்கை 3,500ஐ நெருங்கியது; 2.13 லட்சம் பேர் பாதிப்பு

கொவிட்-19: பலி எண்ணிக்கை 3,500ஐ நெருங்கியது; 2.13 லட்சம் பேர் பாதிப்பு

1 mins read
6d08fd57-7a21-49d9-a7f7-db15aff48962
வாணியம்பாடியில் முகக்கவசம் அணிவது குறித்தும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த கலைக்குழுவினர் எமன் போல் வேடமிட்டு வலம் வந்தனர். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை 3,500ஐ நெருங்­கி­உள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 85 பேர் பலி­யா­ன­தா­க­வும் அவர்­களில் பச்­சி­ளம் குழந்­தை­யும் 15 வய­துச் சிறு­மி­யும் அடங்­கு­வர் என்­றும் தமி­ழக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் ஞாயிற்றுக்­கி­ழ­மை­யு­டன் முடி­வ­டைந்த 24 மணி நேரத்­தில் சுமார் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்றை கண்­ட­றி­வ­தற்­கான பரிசோ­தனை நடத்­தப்­பட்­டுள்­ளது.

இவர்­களில் 6,986 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது.

அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 1,155 பேரும், செங்­கல்­பட்­டில் 501 பேரும், திரு­வள்­ளூ­ரில் 480 பேரும், குறைந்­த­பட்­ச­மாக கரூ­ரில் 12 பேரும், நாமக்­க­லில் 9 பேரும் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை 22.62 லட்­சம் பேருக்கு கொவிட்-19 நோய் கண்­ட­றி­யும் கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது என்­றும் இவர்­களில் சுமார் 2.13 லட்­சம் பேருக்கு பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் சுகா­தா­ரத்­து­றை­யின் அறிக்கை தெரி­விக்­கிறது.

மொத்த எண்­ணிக்­கை­யில் 12 வய­துக்­குட்­பட்ட 10,691 குழந்தை­களும் 60 வய­துக்கு மேற்­பட்ட சுமார் 26 முதி­ய­வர்­களும் அடங்­கு­வர்.

இது­வரை 3,494 பேர் உயிரிழந்தி­ருப்­பது தெரி­ய­ வந்துள்­ளது. அதே­வே­ளை­யில் மாநி­லத்­தில் சுமார் 1.56 லட்­சம் பேர் கொவிட்19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.