தலைமறைவான முன்னாள் எம்எல்ஏ

தலைமறைவான முன்னாள் எம்எல்ஏ

1 mins read
27bbddc9-4852-4b58-9f9a-3676b7f7d196
நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போலிசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். படம்: ஊடகம் -

நாகர்கோவில்: பதின்ம வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போலிசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த முருகேசன் தலைமறைவாகிவிட்டார். இரு ஆண்டுகளுக்கு மேலாக அவர் அச்சிறுமிக்குத் தொல்லை தந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அதிமுக அறிவித்துள்ளது.