கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சென்னை பூக்கடை பசார், பத்திரியன் தெருவில் உள்ள பூக்கடைகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க கடைக்காரர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கடைகளுக்கு முன்னால் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. கிருமிநாசினியைக் கையில் தெளித்தும் முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு இலவசமாக முகக்கவசமும் கடைக்காரர்களே வழங்கி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, கடைகளுக்கு வருவோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு கடைக்காரர்களே குடைகளை வழங்கி வருகின்றனர். இதற்காக ஆயிரம் குடைகளை வாங்கியதுடன், காவலாளிகள் பத்துப் பேரை பணிக்கு அமர்த்தி, தெருவின் இருபுறமும் நின்று குடைகளை வழங்கி தெருவுக்குள் அனுமதித்துவிட்டு, பூக்களை வாங்கியபின் வெளியே வரும்போது, குடைகளை வாங்கிக்கொண்டு அனுப்புகின்றனர். படம்: ஏஎஃப்பி
விதியைக் கடைப்பிடிக்க குடை வழங்கும் கடைக்காரர்கள்
29 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jul 2020 10:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!