சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. 27 மாவட்டங்களில் இத்தொற்று பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலம் முழுவதும் செவ்வாயன்று ஒரே நாளில் 59,584 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 6,972 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது உறுதியானது. அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 27 மாவட்டங்களில் இப் பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது.
"மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 227,688 பேராக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 96,438 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 86% மக்கள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.
"சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு, திருவள்ளூா், விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கிருமியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரையில் 3,659 பேர் உயிரிழந்துள்ளனர்.
"கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 166,956 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சையில் 57,073 பேர் உள்ளனர்," என்று கூறப்பட்டுள்ளது.

