தமிழகத்தில் பணிபுரிய வெளிமாநில ஊழியர்களுக்கு அனுமதி

2 mins read
6030f226-3717-4a99-885c-bb7785e26cc1
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் வெளி மாநி­லத் தொழி­லா­ளர்­கள் மீண்­டும் முன்­பு­போ­லவே வந்து பணி­யாற்று வதற்கு தமி­ழக அரசு அனு­மதி வழங்கி உள்­ளது. இதற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­களும் வெளி­யிடப்­பட்டு உள்­ளன.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊர­டங்கு அம­லில் உள்ளது.

இதை­ய­டுத்து, தொழிற்­சா­லை­கள், வர்த்­தக நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பல­வும் முடங்­கி­ய­தால் தங்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை இழந்த சுமார் 3 லட்­சத்­துக்­கும் அதி­க­மான வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் தங்­கள் சொந்த ஊர் திரும்­பி­னர்.

இந்­நி­லை­யில், தங்­க­ளது சொந்த மாநி­லத்­தி­லும் போது­மான வரு வாயை ஈட்ட முடி­யா­மல் தவித்து வரும் ெவளி­மா­நி­லத் தொழிலாளர் கள், மீண்­டும் தமி­ழ­கம் வர விருப்­பம் தெரி­வித்து உள்­ள­னர்.

அதே­வே­ளை­யில், தங்­க­ளி­டம் வேலை பார்த்­து­வந்த வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­களை மீண்­டும் பணி யில் சேர்த்­துக்­கொள்ள தமி­ழக நிறு­வ­னங்­களும் அனு­மதி கோரின.

இதைத்­தொ­டர்ந்து, அவர்­க­ளைப் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுடன் பணி­யில் அமர்த்த தமி­ழக அரசு அனு­மதி தந்­துள்­ளது.

தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ளர் கே.சண்­மு­கம் வெளி­யிட்ட அர­சா­ணை­யில், "தமி­ழ­கம் வரும் அனைத்து தொழி­லா­ளர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளின் சொந்த செல­வில் கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட வேண்­டும். தொற்று உள்­ள­வர்­களை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கவேண்­டும். தொற்று இல்­லா­த­வர்­களை 14 நாட்­கள் தனிமைப்­ப­டுத்­திய பின் வேலைக்கு அமர்த்­த­லாம். பணி­யி­டத்­தில் சோப் மூலம் கைக­ழு­வு­தல், முகக்­க­வ­சம் அணி­தல், சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­தல் உள்­ளிட்ட சுகா­தார வழி­முறை­க­ளைப் பின்­பற்ற வேண்டும். ஒவ்­வொரு நாளும் உடல் வெப்ப பரி­சோ­தனை மேற்­கொள்ள வேண்­டும்," என்று கூறப்­பட்­டுள்­ளது.

சென்னையில் பேருந்துகள் ஓட வாய்ப்பில்லை

சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளையுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஆகஸ்ட் 1 முதல் இயல்பு நிலை திரும்புமா? அல்லது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சென்னையில் பேருந்துகள் ஓட வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.