சென்னை: மருத்துவா்களின் ஆலோசனைப்படி தமிழக அரசு எடுத்த சரியான நடவடிக்கைகளின் பயனாக சென்னை மாநகரில் கிருமித்தொற்று குறைந்துள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“சென்னை மாநகரின் குறுகலான வீதிகளில் நெருக்கமாக வீடுகள் உள்ளதால், இங்கு வசிக்கும் மக்களிடம் நோய்த்தொற்று எளிதாகப் பரவி விடுகிறது. எனவே, இத்தொற்றுப் பரவல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் தொற்று குறைக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியே விடாமல் பாதுகாப்பாக வைத்துள்ளோம். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வசிப்பிடத்துக்கே சென்று விநியோகம் செய்கிறோம். சென்னையில் படிப்படியாக தொற்று குறைந்திருக்கிறது. பிற மாவட்டங்களிலும் இத்தொற்று குறைவதற்கான அறிகுறி தெரிகிறது,” என முதல்வர் பழனிசாமி கூறினாா்.