சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வுக்காக போயஸ் கார்டனில் பல கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனம் ஒன்று சொகுசு மாளி கையைக் கட்டி வருகிறது.
சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேற முடியாது என்பதால், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டின் அருகிலேயே சசிகலாவுக்காக பல கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது தண்டனைக் காலம் முடிந்து அவர் விரைவில் வெளிவர உள்ளதாகக் கூறப்படுகிறது.
இ்தற்கிடையே, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தமிழக அரசின் அரசுடைமையாகி உள்ளது.
இந்நிலையில், ‘ஸ்ரீஹரிசந்தனா எஸ்டேட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் 2019ஆம் ஆண்டு சிஎம்டிஏவிடம் இருந்து மாளிகையைக் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. தரைத் தளத்துடன் மேலும் இரண்டு தளங்கள் உடையதாக, இரு பிரிவாக இந்த பங்களா கட்டப்பட்டு வருகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் சிஎம்டி ஏவில் இதற்கான அனுமதி பெற்றி ருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.