தஞ்சாவூர்: ‘இரும்புத் திரை’ திரைப்படத்தில் வருவது போல் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி ஆகிய மூன்று வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.5 கோடி வரை நுாதன முறையில் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் வங்கிகளில் பணத் ைதப் போட்டு, பணத்தை இழந் துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் நேற்று வங்கியில் குவிந்தனர்.
அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி தீவிர விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரி, பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர்கள் நேற்று முன்தினம் தஞ்சாவூர் காவல் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர் ரயில் நகரைச் சேர்ந்த அப்துல் முகமது அயூப், 51, என்ற பொறியாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரேநாளில் ரூ.40,000 எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பொதுப்பணித் துறை யில் கண்காணிப்பாளராகப் பணி யாற்றி வரும் பாலசுந்தரம் என்ப வரது கணக்கில் ரூ.30,000 பண மும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் அனைத்தும் திருச்சியில் உள்ள ஏடிஎம் மையத் தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் விசாரித்து வருகின்றனர்.