நீலகிரி: கனமழை, வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற பாதிப்புகளின் காரணமாக நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள் ளாகி உள்ளது.
இயற்கை வளங்கள் ஒருங்கே நிறைந்துள்ள நீலகிரியில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசிவருவதால் 200க்கும் மேற்பட்ட இடங்கள் அபாயகரமான பகுதி களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எங்கு பார்த்தாலும் வெள்ளப் பெருக்கு, முறிந்து விழுந்த மரங் கள், சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள், சரிந்து விழுந்த மலை முகடுகள், மண்சரிவுகளுடன் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி காட்சி அளிக்கிறது.
நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்துவருவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்க ளைப் பாதுகாப்பாக தங்கவைக்க 567 முகாம்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன், இந்த முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரியில் தொடர் கனமழைகாரணமாக சத்தியா நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, பூமி பிளவுபட்டது. இதர சில இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அம்மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
ஏற்கெனவே மின்சாரம், தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சில வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
வனப்பகுதி ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்பிறகும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை உதகை, கூடலூர் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகையைச் சுற்றியுள்ள இத்தலார், எமரால்ட், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதி களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள ஓவேலி ஆறு, மாயாறு, பாண்டி யாறு, புன்னம்புழா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
படம்: ஊடகம்

