740 டன் ரசாயனத்தை அப்புறப்படுத்த உத்தரவு

740 டன் ரசாயனத்தை அப்புறப்படுத்த உத்தரவு

1 mins read
9dbc3248-8c00-4396-a773-c4af19db1276
-

சென்னை: சென்னை மண­லி­யில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அம்­மோ­னி­யம் நைட்­ரேட் ரசா­ய­னத்தை உட­ன­டி­யாக அப்­பு­றப்­ப­டுத்­தும்படி மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த 5 ஆண்­டு­க­ளாக 740 டன் ரசாயனம் சென்­னை­யில் உள்ள சரக்­குப் பெட்­டக மையத்­தின் இருப்பில் இருந்து வரு­கிறது.

கரூ­ரைச் சோ்ந்த தனியாா் நிறு­வ­னம், தென்­கொ­ரிய நாட்­டில் இருந்து சட்­ட­வி­ரோ­த­மாக இறக்­கு­மதி செய்த இந்த ரசா­ய­னத்­தின் மதிப்பு சுமாா் ரூ. 2.கோடி என்றும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த ரசாயனத்தை உட­ன­டி­யாக அப்­பு­றப் படுத்­து­வது குறித்து சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் ஐபிஎஸ் அதி காரி சைலேந்­திர பாபு ஆலோ­சனை நடத்­தினாா்.

அப்போது, ரசாயனத்தால் விபத்து ஏற்­படும் வாய்ப்பு இல்லை என சுங்கத்துறை கூறியது.

சுங்­கத்­துறை தனது அறிக்­கை­யில், 2 கிலோ மீட்­டர் சுற்­ற­ள­வில் வீடு­கள் இல்லை என கூறி­யுள்­ள­தா­க­வும் ஆனால், அம்­மோ­னி­யம் நைட்­ரேட் வைக்­கப்­பட்­டுள்ள இடத்­தைச் சுற்றி 12,000 வீடு­கள் உள்­ள­தா­க­வும் மாசுக் கட்­டு­ப்பாட்டு வாரி­யம் கூறி­யுள்­ளது. 700 மீட்­டர் தூரத்­தில் 7,000 குடி­யி­ருப்­பு­களும் 1,500 மீட்­டர் தொலை­வில் 5,000 குடி­யி­ருப்­பு­களும் உள்­ளதாகவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதையடுத்து, உட­ன­டி­யாக ரசாயனத்தை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு சுங்­கத்­துறை ஆணை­ய­ருக்கு மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.