நீலகிரி: நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இம்மைய இயக்குநர் புவியரசன் வெயிட்டுள்ள அறிவிப்பில், "தென் மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
"இதன்காரணமாக, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
"சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
"தமிழக கடலோர மாவட்டங் களில் மிதமான மழை பெய்யும். சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளும் மேகமூட்டமாகவும் ஒருசில பகுதிகளில் குறைந்த அள விலும் மழை பெய்யக்கூடும்.
"தென்மேற்கு, அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 11ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்," என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குமரி மாவட்டத் தில் சூறைக்காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் 'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஏற்கெனவே மழை, வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற பாதிப்புகளின் காரணமாக நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என புவியரசன் எச்சரித் துள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். எனினும் நீலகிரியில் ஒருசில பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.

