திருநெல்வேலி: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று பரவும் வேகம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால்தான் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் பழையபடி இயங்கத் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"போக்குவரத்துச் சேவைகள் முழுவீச்சில் இயங்கும் தருவாயில்தான் இ-பாஸ் அனுமதி முறை ரத்து செய்யப்படும். அந்த சூழ்நிலைக்கு தமிழகம் திரும்பும் வரை, இ-பாஸ் அனுமதி முறை ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை," என்று முதல்வர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்்.
நெல்லை, தென்காசி மாவட் டங்களில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களுக்கான திறப்பு விழாவும் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.3 கோடி மதிப்பிலான 8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்துடன் 31.04 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்துள்ள 19 திட்டப் பணிகளையும் காெணாளிக் காட்சி வழி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, விழாவில் முதல்வர் பேசினார். அவர் கூறுகை யில், "கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண் ணிக்கை மற்ற மாநிலங்களை விடதமிழகத்தில் அதிகமாக உள்ளது.
"வரும் 2021ஆம் ஆண்டு இறு திக்குள் தாமிரபரணி ஆறு, நம்பி ஆறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேறும்.
"தமிழகத்தில் கொரோனா பரவ லைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக இந்த ஆண்டில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்சில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
"கொரோனா தாக்கம் முழுமையாகக் குறைந்தபிறகுதான் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.
"இ-பாஸ் நடைமுறையை எளிதாக்கி உள்ளோம். அத்தியாவசிய பணிகளுக்காக விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்," என்றார் முதல்வர்.
முன்பு மண்டல வாரியாக பேருந்துகளை இயக்கினோம். ஆனால், கிருமிப் பரவல் கூடிவிட்டது. அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இனி தொற்று குறைந்த பிறகே இதைத் தொடங்குவது குறித்து ஆலோசிப்போம்.

