திருவண்ணாமலை: கொேரானா கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர் மருத்துவமனையில் இருந்து தனது வீட்டுக்கு தப்பிச் சென்றபோது, பாதி வழியிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அவரது சடலம் உரிய பாது காப்பு விதிமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது ஆடவர் ஒருவர் அப் பகுதியில் உள்ள ஒரு உண வகத்தில் உணவு சமைப்பவராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து காணாமல் போனார்.
இந்நிலையில், நேற்று காலை திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையோரத்தில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
விசாரணையில், கொரோனா வார்டில் இருந்து தப்பிச்சென்றது உறுதியானது.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு அதிகாலை நேரத்தில் அவர் வந்தபோது, மூச்சுத்திணறல் அதிகரித்து மயங்கி விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெளிநாடு களில் இருந்து 5 சிறப்பு விமா னங்கள் மூலமாக 534 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்.அவர்கள் அனைவரும் சென் னையில் உள்ள கல்லூரி, தங்கும் விடுதி முகாம்களில் தனிமைப் படுத்தப்பட்டனர்.