சென்னை: தமிழக மாநிலத்தில் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை முதல்முறையாக மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒருபக்கம் பாதிப்பு இப்படி மூன்று லட்சத்தைக் கடந்தாலும் மறுபக்கம் குணமடைந்தோர் எண் ணிக்கை 250,000 பேரை நெருங்கி வருவதால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
திங்கள்கிழமை ஒரே நாளில் 5,914 பேரிடம் இத்தொற்று பரவி இருந்தது பரிசோதனையில் உறுதி யானது. இவர்களையும் சேர்த்து மாநிலத்தில் இதுவரை 302,815 பேர் இந்தக் கிருமித்தொற்றால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அத்துடன், கொவிட்-19 உயிரிழப்பும் 5,041 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இதுவரை 244,675 பேர் கொரோனா கிருமிப் பரவலில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். அதாவது, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% மக்கள் குணமடைந்துள்ளனர்.
“தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302,815 ஆக அதிகரித்துள்ளது. இங்குள்ள 130 ஆய்வகங்கள் மூலமாக இதுவரை 32,92,958 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“தற்போது மாநிலத்தில் 53,099 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
“சென்னையில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் திங்கட்கிழமை ஒரே நாளில் 976 பேரிடம் இத்தொற்று கண்டறியப்பட்டது. அங்கு, தற்போது இந்த பாதிப்புக்குள்ளான 11,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர் களைக் கண்காணிக்க ‘அம்மா கொவிட் ஹோம் கேர்’ திட்டத்தை விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது தமிழக அரசு. இத்திட்டம் அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரதமரிடம் ரூ.3,000 கோடி கேட்டுள்ள முதல்வர்
புதுடெல்லி: கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் அவர் விவரம் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனையின்போது, “கொரோனா கிருமி முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,000 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கவேண்டும், நவம்பர் மாதம் வரை தமிழக மக்களுக்கு ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும், மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடி ஒதுக்க வேண்டும், தேசிய பேரிடர் மீட்பு நிதி யில் இருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை வழங்க வேண் டும்,” என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.