அரியலூர்: ஒரு திரைப்படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு காவல்நிலையத்தில் புகார் அளிப் பார். அதேபோன்ற சம்பவம் அரிய லூர் மாவட்டத்திலும் நடந்துள்ளது.
“உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா என்ற ஓடையைக் காணவில்லை. இதனால் எங்கள் பயிர்களுக்கு போதுமான அளவில் நீர்ப்பாசன வசதி இல்லாததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே ஊர்கா ஓடை யைக் கண்டுபிடித்து தரவேண்டும்,” என அரியலூர் மாவட்ட விவ சாயிகள் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு ஊர்கா ஓடையைத் தூர்வாரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ‘ஓடையைக் காணவில்லை’ என்ற மக்களின் குற்றச்சாட்டு மீண்டும் தொலைக் காட்சியில் செய்தியாக ஒளிபரப்பானதை அடுத்து, காணாமல் போன ஓடையை மீட்கும்படி இம்மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டார். இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.