புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் உள்ள துணிக்கடைகளில் ஒருவர் ரூ.1,000க்கு மேல் செலவு செய்தால் கட்டைப் பை என்ற துணிப் பைகள் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்த கட்டைப் பைக்குள் போட்டு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை (படம்) வீசப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலடிக்கொள்ளை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டைப் பைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வழியாக வந்தவர்கள் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதபடி முண்டிக்கொண்டு இருந்தது.
புதுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன் தினம் ராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் இதுபோல் மற்றொரு குழந்தை மீட்கப்பட்டது.