அனைத்து பள்ளிகளிலும் வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

சென்னை: தமி­ழ­கத்­தில் அர­சுப் பள்­ளி­கள் உள்­பட அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் ஆகஸ்ட் 17ஆம் தேதி திங்­கள்­கி­ழமை முதல் 2020-2021ஆம் கல்வியாண்­டுக்­கான மாணவா் சோ்க்கை நடை­பெ­றும் என பள்­ளிக் கல்­வித்­துறை அமைச் சா் செங்­கோட்­டை­யன் தெரி­வித்­துள்­ளார்.

“ஆனால், பள்­ளி­க­ளைத் திறப்­பது மட்­டும் இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்லை,” என்­றும் செங்­கோட்­டை­யன் உறு­தி­யு­டன் கூறி­யுள்­ளார்.

பள்­ளி­களில் மாண­வர் சேர்க்கை நடை­பெ­றும் நாளன்றே விலை­யில்லா பாடப்­புத்­த­கங்­கள், நோட்டு புத்­த­கங்­கள் பாதுகாப்பு நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்றி வழங்­கப்­பட உள்ளன.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தாக்கத்தை முறி­ய­டிக்க, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்­கம் அறி­விக்­கப்­பட்­டது.

அது­மு­தல் பள்ளி, கல்­லூ­ரி­கள் உட்­பட அனைத்து கல்வி மையங்­களும் மூடப்­பட்­டுள்­ளன. மாண­வர்­களும் பெற்­றோ­ரும் கல்வி நிலை­யங்­கள் எப்­போ­து­தான் திறக்­கப்­படும் என்ற கேள்­விக்­கான பதிலை எதிர்­பார்த்துக் காத்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் வரும் 31ஆம் தேதிவரை பொது­மு­டக்­கம் நடப்­பில் இருப்பதால், அதன்­பின்னர் பள்ளி, கல்­லூரி­கள் திறக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பு நில­வி வந்தது.

இந்நிலையில், சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் பேசியபோது, “தமி­ழ­கத்­தில் கொரோனா தாக்­கம் இன்­னும் தணி­ய­வில்லை. எனவே, தற்­போது பள்ளிகளைத் திறக்க இய­லாது.

“பெற்­றோர், கல்வியாளர்­க­ளின் கருத்­து­க­ளை அறிந்த பிற­கும் கொரோ­னா­வின் தாக்­கம் குறைந்­த­பி­ற­கும்­தான் பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து ஆலோ­சிக்க வேண்­டும் என்று அனைத்து துறையின ருக்கும் முதல்­வர் பழ­னி­சாமி ஆலோ­சனை வழங்கி இருக்­கி­றார்.

“பள்ளி திறக்­கப்­படும் தேதி குறித்து முதல்­வர்­தான் முடி­வு­களை அறி­விப்­பார். முதல்­வர் தலை­மை­யி­லான நிபு­ணர் குழு­வி­னர் முடிவு செய்து அறி­விக்­கும் வரை, பள்­ளி­களைத் திறப்­ப­தற்­கான சாத்­தியக் கூறு­களே இல்லை,” என்றார்.

இத­னால், அடுத்த மாத­மும் பள்ளிகளைத் திறப்­ப­தற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரி­கிறது.

“டிசம்­பர் வரை­யில் பள்­ளி­க­ளைத் திறப்­பது குறித்து எந்த முடி­வும் எடுக்­கப்­ப­டாது,” என மத்­திய அர­சின் மனி­த­வள மேம்­பாட்டு அமைச்­ச ­க­மும் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­துள்­ளது.

மாணவர் சேர்க்கை துவங்கினா லும் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!