சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 2020-2021ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச் சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
“ஆனால், பள்ளிகளைத் திறப்பது மட்டும் இப்போதைக்கு சாத்தியமில்லை,” என்றும் செங்கோட்டையன் உறுதியுடன் கூறியுள்ளார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கொரோனா கிருமித் தாக்கத்தை முறியடிக்க, கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
அதுமுதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி மையங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களும் பெற்றோரும் கல்வி நிலையங்கள் எப்போதுதான் திறக்கப்படும் என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நடப்பில் இருப்பதால், அதன்பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் பேசியபோது, “தமிழகத்தில் கொரோனா தாக்கம் இன்னும் தணியவில்லை. எனவே, தற்போது பள்ளிகளைத் திறக்க இயலாது.
“பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்த பிறகும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபிறகும்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று அனைத்து துறையின ருக்கும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
“பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர்தான் முடிவுகளை அறிவிப்பார். முதல்வர் தலைமையிலான நிபுணர் குழுவினர் முடிவு செய்து அறிவிக்கும் வரை, பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை,” என்றார்.
இதனால், அடுத்த மாதமும் பள்ளிகளைத் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
“டிசம்பர் வரையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது,” என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்ச கமும் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை துவங்கினா லும் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்