சென்னை: காதலை பாதியில் துண்டித்ததால் ஃபேஸ்புக்கில் காதலியின் படத்தை ஆபாசமாக வெளியிட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடம் காஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன், 24. பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியும் இவரும் ஈராண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரம் அறிந்த மாணவியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். அதன்பிறகு மகாதேவனைச் சந்திப்பதை அப்ெபண் தவிர்த்து வந்தார். தன்னுடன் மீண்டும் பேசும்படி மகா
தேவன் பலமுறை வலியுறுத்தியும் மாணவி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகாதேவன், பழிவாங்கும் நோக்கில் மாணவியின் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி அதில் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றியதுடன் மாணவியின் கைபேசி எண்ணையும் பதிவு செய்தார். இதனால் மாணவியின் ைக
பேசியில் பல்வேறு நபர்கள் தொடர்புகொண்டு தகாதமுறையில் பேசினர்.
அதிர்ச்சி அடைந்த மாணவியும் அவரது பெற்றோரும் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தீவிர விசாரணை நடத்திய போலிசார், மகாதேவனை கைது செய்தனர். அவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாதேவனை விசாரணைக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.