சென்னை: இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு, தமிழக மக்களுக்கு உரையாற்றியவர், “உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
“பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்த மகளிர் குழுவிற்கு கடன் உதவி வழங்கப்படும்.
“குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் ரூ.7,500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும். பொருளாதாரத்தில் தமிழகம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்,” என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று அவரது தொகுதியான போடி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் களத்தில் சலசலப்பு கிளம்பி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.