மூன்று நிமிடங்களில் 230 குறள்களை ஒப்புவித்து 13 வயது மாணவி உலக சாதனை

மூன்று நிமிடங்களில் 230 குறள்களை ஒப்புவித்து 13 வயது மாணவி உலக சாதனை

1 mins read
f079234d-1efc-4bbe-a65a-e61577382e34
-

நாகர்­கோ­வில்: கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தைச் சேர்ந்த எட்­டாம் வகுப்பு மாணவி யூதிஷா, மூன்று நிமி­டம் 25 விநா­டி­களில் 230 திருக்­கு­றள்களை கடகட­வென்று மனப்­பா­ட­மாக ஒப்­பு­வித்து உலக சாதனை படைத்­துள்­ளார்.

சொத்­த­விளை அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யில் 8ஆம் வகுப்பில் படித்து வரு­ம் 13 வயது மாணவி யூதிஷா, 5 நிமி­டத்­தில் 230 குறள்களை ஒப்பு­விக்க பயிற்சி செய்து வந்­தார்.

நாகர்­கோ­வில் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் நடந்த நிகழ்வில், யூதிஷா இந்த ஐந்து நிமிட நேரத்துக்கு முன்­பா­கவே குறள்களை ஒப்புவித்தார்.

மூன்று நிமி­டம் 25 விநா­டி­களில் 230 குற­ள்களையும் ஒப்­பு­வித்து உலக சாதனை படைத்­தார்.

டிரம்ப் உலக சாதனை ஆய்வு மையத்­தின் தென்­மண்­டல நடு­வர் சம்­பத்­கு­மார் இந்­நி­கழ்வை பதிவு செய்­தார்.

நாகர்­கோ­வில் மாவட்ட ஆட்­சி­யர் பிர­சாந்த் மு.வட­நேரே, தமி­ழக அர­சின் டெல்லி பிர­தி­நிதி தள­வாய் சுந்­த­ரம் உள்­ளிட்ட பல­ரும் மாணவி­யைப் பாராட்­டி­னர்.

இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் 2ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா ஹரிணி 5 நிமிடங்கள் 39 விநாடிகளில் 200 திருக்குறளை ஒப்புவித்து ட்ரம்ப் உலக சாதனை புரிந்திருந்தார். அதன்பின்னர் இச்சாதனையை தற்போது மாணவி யூதிஷா முறியடித்துள்ளார்.

மாணவி யூதிஷா மூன்று நிமி­டம் 25 விநா­டி­களில் 230 குற­ள்களை மனப்­பா­ட­மாக ஒப்­பு­வித்து உலக சாதனை படைத்­தார். அதற்கான சான்றிதழை அவர் காட்டு கிறார்.

படம்:

ஊடகம்