கட்சி பற்றி தனிப்பட்ட கருத்துகளைச் சொல்லாதீர்கள்

கட்சி பற்றி தனிப்பட்ட கருத்துகளைச் சொல்லாதீர்கள்

2 mins read
b5400b97-1ab3-48b9-9ce4-e132ea070fb8
அதி­முக ஒருங்­கி­ணைப்­பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்­னீா்செல்­வம்அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி. -

அதிமுக கட்சியினருக்கு கட்சித் தலைமை உத்தரவு

சென்னை: கட்சி விவ­கா­ரங்­கள் தொடா்பாக எந்­த­வித யோச­னை­யும் இல்­லா­மல் தனிப்­பட்ட முறை­யில் கருத்­து­களை தெரி­விப்­பதை கட்­சி­யினா் தவிா்க்க வேண்­டும் என அதி­முக தலைமை கேட்­டுக் கொண்­டுள்­ளது.

இதனை மீறுவோா் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் எச்­ச­ரித்­துள்­ளது.

அதி­முக ஒருங்­கி­ணைப்­பாளா் ஓ.பன்­னீா்செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்­பாளா் எடப்­பாடி கே.பழ­னி­சாமி ஆகியோா் கூட்­டாக சனிக்­கிழமை அறிக்கை வெளியிட்டனர்.

முன்­னாள் முதல்­வா்­கள் எம்.ஜி.ஆா்., ஜெய­ல­லிதா ஆகி­யோ­ரின் கன­வு­களை நன­வாக்­க­வும், கட்­சி­யின் லட்­சி­யங்­க­ளுக்கு செயல்­வ­டி­வம் கொடுக்­க­வும் தமி­ழக அரசு சிறப்­பாக செயல்­பட்டு வரு­கிறது.

நாம் தமி­ழக மக்­க­ளுக்­காக ஆற்ற வேண்­டிய பணி­கள் இன்­னும் ஏரா­ள­மாக உள்­ளன.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக மாற்­றா­ரும் பாராட்­டும் வகை­யில் கட்­சி­யும், ஆட்­சி­யும் வழி­ந­டத்­தப்­பட்­டது. அதைப் போன்றே, இனி­வ­ரும் காலங்­க­ளி­லும் சிறப்­புற ஆட்சி நடத்தி மீண்­டும் ஒரு தொடா் வெற்­றி­யைப் பெற அனை­வ­ரும் ஒன்­று­பட்டு உழைக்க வேண்­டிய தரு­ணம் இது.

கடந்த சில நாள்­க­ளாக கட்சி நிா்வாகி­களில் சிலா் எந்­தப் பின்­ன­ணி­யும் இன்றி கூறிய சில கருத்­து­கள் மாற்­றா­ருக்கு பெரும் விவா­தப் பொரு­ளாக மாறிவிட்­டது. அத்­த­கைய நிலை மீண்­டும் ஏற்­ப­டாத வகை­யில் கட்சி ராணுவ கட்­டுப்­பாட்­டு­டன், தலை­மை­யின் முடி­வுக்­குக் கட்­டுப்­பட்டு செயல்­பட வேண்­டும். கட்­சி­யின் அனைத்து முக்­கிய கொள்கை முடி­வு­க­ளை­யும், கூட்­டணி குறித்த நிலைப்­பா­டு­க­ளை­யும் ஜன­நா­யக ரீதி­யில் கட்­சித் தலைமை விரி­வாக ஆலோ­சித்து, கட்­சி­யி­ன­ரின் மன உணா்வு­களை எதி­ரொ­லிக்­கும் வகை­யில் சிறப்­பான முடி­வு­களை மேற்­கொள்­ளும்.

எனவே, சிறு சல­ச­லப்­பு­க­ளுக்­கும் இடம் தரா­மல் நம்மை வீழ்த்த நினைப்­போ­ரின் பேரா­சை­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்­டாம்.

அதிமுகவினர் அனைவரும் ஒன்­று­பட்டு உழைத்­திட அனை­வ­ரை­யும் அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றோம்.

அனைத்து நிலை­க­ளி­லும் கட்­சிப் பொறுப்­பா­ளா்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் எந்­த­வித யோச­னை­யும் இல்­லா­மல், கட்­சித் தலை­மை­யின் ஒப்­பு­தல் இல்­லா­மல் பொது­வெ­ளி­யில் கருத்­து­க­ளைத் தெரி­விப்­பதை கண்­டிப்­பாக தவிா்க்க வேண்­டும். இதை மீறுவோா் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கருத்­துப் பரி­மாற்­றங்­க­ளைச் செய்­வ­தன் மூலம் நாம் எதை­யும் சாதிக்­கப் போவ­தில்லை.

எனவே, கட்சியினர் ஊடக விவா­தங்­களில் அர­சின் சாத­னை­க­ளைப் பற்­றி­யும், மற்ற மாநி­லங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக அரசு செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­க­ளைப் பற்­றி­யும் எடுத்­துச் சொல்­லுங்­கள் என அதி­முக தலைமை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.