'மதுரையை மையமாகக் கொண்ட இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும்'

'மதுரையை மையமாகக் கொண்ட இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும்'

1 mins read
02a7d38e-6c50-4ded-b913-597be99712a7
-

சென்னை: அதி­மு­க­வில் அடுத்த முதல்­வர் வேட்­பா­ளர் யார் என்­கிற விவா­தம் தொடர்ந்து வந்த நிலை­யில், நேற்று அமைச்­சர் ஆர்.பி. உத­ய­கு­மார் (படம்) உள்­ளிட்ட மூத்த அமைச்­சர்­கள் 10 பேர் சென்­னை­யி­லுள்ள முதல்­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மற்­றும் துணை முத­ல­மைச்­சர் ஓ.பன்­னீர்­செல்­வம் ஆகி­யோரை அடுத்­த­டுத்து சந்­தித்து ஆலோ­சனை நடத்­திய நிகழ்வு பர­ப­ரப்­பான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யது.

அதன்­பின்பு முதல்­வ­ரும் துணை முதல்­வ­ரும் கூட்­ட­றிக்கை வெளி­யிட்டு சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைத்த நிலை­யில், சனிக்­கி­ழமை மதுரை திரும்­பிய அமைச்­சர் உத­ய­கு­மார், மதுரை மாவட்­டம் திரு­மங்­க­லத்­தில், தான் வகிக்­கும் மதுரை புற­ந­கர் மாவட்­டச் செய­லா­ளர் என்­கிற முறை­யில் புற­ந­கர் மாவட்ட நிர்­வா­கி­களை அழைத்து அவ­ச­ரத் தீர்­மா­னம் ஒன்றை நிறை­வேற்­றி­னார். அதில் தென்­மா­வட்ட தொழில் வளர்ச்­சி­யைக் கருத்­தில் கொண்­டும், தென்­மா­வட்­டங்­களில் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்பை உயர்த்­து­வ­தற்­கும் மது­ரை­யைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு இரண்­டா­வது தலை­ந­கர் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார்.

மது­ரை­யில் உயர்­நீ­தி­மன்றக் கிளை, அனைத்துலக விமான நிலை­யம், எய்ம்ஸ் மருத்­து­வ­மனை, 150 கிலோ மீட்­டர் தூரத்­தில் தூத்­துக்­குடி துறை­மு­கம் ஆகி­யவை அமை­யப்­பெற்­றுள்ள நிலை­யில், தலை­ந­க­ருக்கு உரிய அனைத்­துச் சிறப்­பு­களும் பெற்­றுள்­ள­தால் முதல்­வர் மற்­றும் துணை முதல்­வர் ஆகி­யோர் மது­ரையை இரண்­டாம் தலை­ந­க­ராக அறி­விக்க வேண்­டும் என அந்த தீர்­மா­னத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.