சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனினும், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நிலவரப்படி, சென்னையில் இதுவரை 1,15,444 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 2,434 பேர் உயிரிழந்துள்ளனர். 1,01,689 பேர் குணமடைந்த நிலையில், இப்போது 11,321 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் மட்டும்1,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கத்தில் 1,339 பேரும், அண்ணா நகரில் 1,162 பேரும், அடையாறில் 1,118 பேரும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

