லட்சத்துக்கு மேற்பட்ட இ-பாஸ்

லட்சத்துக்கு மேற்பட்ட இ-பாஸ்

1 mins read
aefbb572-bfb6-49b9-b34b-fad868733ba1
தமிழகம் முழுவதும்இ-பாஸ் சோதனை யில் தீவிர மாக ஈடுபட்ட போலி சார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: கொரோனா கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக ஒரு மாவட்­டத்­தி­லி­ருந்து இன்­னொரு மாவட்­டத்­திற்­குள் நுழை­யும் வாக­னங்­க­ளுக்கு இ-பாஸ் முறை நடப்­பில் உள்­ளது. அத­னைப் பெற கடு­மை­யான விதி­மு­றை­கள் இருந்­தன.

அண்­மை­யில் விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்டு இ-பாஸ் பெறு­வது எளிமை ஆக்­கப்­பட்­டது. விண்­ணப்­பிக்­கும் அனை­வ­ருக்­கும் இ-பாஸ் வழங்­கப்­பட்டு வரு­கிறது.

தளர்­வின்றி இ-பாஸ் வழங்­கும் முறை நடப்­புக்கு வந்­த­தும் நேற்று முன்­தி­னம் திங்­கட்­கி­ழமை மட்­டும் ஒரு லட்­சத்து 20 ஆயி­ரம் இ-பாஸ் வழங்­கப்­பட்­டது.

இ-பாஸ் முறை நடப்­புக்கு வந்த பின்­னர் ஒரே நாளில் ஒரு லட்சத்துக் கும் அதி­க­மாக வழங்­கப்­பட்­டது இதுவே முதல் முறை.

இதற்கு முன்­னர், ஒரு நாளில் அதி­க­பட்­ச­மாக கிட்­டத்­தட்ட 15,000 இ-பாஸ் மட்­டுமே வழங்­கப்­பட்டு வந்­தது. ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட வாக­னங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­ட­தால் ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­குள்­ளும் நுழை­யும் வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. குறிப்­பாக, சென்னை மாந­க­ருக்குள் ஆயி­ரக்­க­ணக்­கான வாக­னங்­கள் புகுந்­தன.

திங்­கட்­கி­ழமை மாலை 6 மணி நில­வ­ரப்­படி வெளி­மா­வட்­டங்­களில் இருந்து 19,000 வாக­னங்­கள் சென்­னைக்­குள் நுழைந்­த­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா குறிப்­பிட்­டது.

பர­னூர், ஸ்ரீபெ­ரும்­பு­தூர் ஆகிய இரு 'டோல்­கேட்' வாயி­லாக நுழைந்த வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை அவை. குறிப்­பாக, பர­னூர் டோல்­கேட்­டில் வாகன நெரி­சல் ஏற்­படும் அள­வுக்கு ஏரா­ள­மான வாக­னங்­கள் அணி­வ­குத்து நின்­றி­ருந்­த­தாக அச்­செய்தி குறிப்­பிட்­டது. பல்லாயிரம் வாகனங்கள் நேற்றும் சென்னைக் குள் சென்றன.