அரிசி விளைச்சல் அமோகம்: ரூ. 10க்கு கூவிகூவி விற்பனை

1 mins read
80c818f8-cacb-40e9-8bee-1b5332278119
டெல்டா பகு­தி­களில் அறு­வடை செய்ய இயந்­தி­ரங்­கள் கிடைக்­கா­மல் விவ­சா­யி­கள் திண்­டா­டு­கிறார்கள். பரு­வ­மழை பக்­கத்து மாநி­லங்­க­ளி­லும் தமி­ழ­கத்­தி­லும் அதி­கம் பெய்­வதே நல்ல விளைச்­சலுக்குக் கார­ணம் என்று அர­சும் விவ­சா­யி­களும் கூறு­கி­றார்­கள். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் சென்ற ஆண்­டும் இந்த ஆண்­டும் நெல் விளைச்­சல் அமோ­க­மாக இருப்பதால் அரி­சிக்­குப் பஞ்­சமே இல்லை என்ற நிலை உரு­வாகி உள்ளது.

வயல்­களில் விளைந்து விவ­சா­யி­கள் மூட்டை மூட்­டை­யா­கக் கொண்டு வரும் நெல்லை வாங்கி சேமிப்­புக் கிடங்­கு­களில் அர­சாங்கம் இருப்பு வைத்துவரு­கிறது.

டெல்டா பகு­தி­களில் அறு­வடை செய்ய இயந்­தி­ரங்­கள் கிடைக்­கா­மல் விவ­சா­யி­கள் திண்­டா­டு­கிறார்கள். பரு­வ­மழை பக்­கத்து மாநி­லங்­க­ளி­லும் தமி­ழ­கத்­தி­லும் அதி­கம் பெய்­வதே நல்ல விளைச்­சலுக்குக் கார­ணம் என்று அர­சும் விவ­சா­யி­களும் கூறு­கி­றார்­கள்.

விளைச்­சல் ஒரு­பு­றம் இருக்க, அரிசி அட்டை வைத்­துள்ள ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 45 முதல் 50 கிலோ அரிசி மாதா­மா­தம் இல­வ­ச­மாக ரேஷன் கடை­க­ளின் மூலம் அர­சு வழங்கி வரு­கிறது.

இப்­படி ரேஷன் அரி­சியை இல­வ­ச­மா­கப் பெறும் நடுத்­தர மக்கள் அதை வட­மா­நிலத் தொழி­லா­ள­ருக்கு விற்று வந்­த­னர். ஆனால் கொவிட்-19 கார­ண­மாக அந்தத் தொழி­லா­ளர்கள் சொந்த ஊர் சென்­று­விட்­ட­தால், இப்­போது ேரஷன் அரி­சியை விற்க முடி­ய­வில்லை. இச்­சூ­ழ­லில், ரேஷன் அரிசி ரூ. 10 விலைக்­குக் கூவி­கூவி சட்­ட­வி­ரோ­த­மாக விற்­கப்­படு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

திருப்­பூர் பகு­தி­யில் ஒரு மளி­கைக் கடைக்கு வெளியே சாலை ஓர­மாக ரேஷன் அரிசி மூட்­டைகள் அடுக்கி வைக்­கப்­பட்டு வியா­பாரம் நடந்­த­தைக் கண்டு வியந்து மக்கள் அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்தனர்.

அதையடுத்து சில இளைஞர்கள் அந்த அரிசி மூட்டைகளை வாகனங்களில் எடுத்துச் சென்று பதுக்கிவிட்டதாகக் கூறப்பட்டது.