கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ; 3 ஆம்னி பேருந்துகள் கருகின

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகலில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று பேருந்துகள் கருகி சேதமடைந்தன.

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனால், பேருந்துகள் பல மாதங்களாக ஓடாமல் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இப்படி நிறுத்தப்பட்டு இருந்த சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் திடீரென்று தீ மூண்டது. ஐந்து பேருந்துகளில் தீப்பற்றியது. அவற்றில் மூன்று முற்றிலும் கருகி சேதமடைந்தன.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். யுனிவர்சல், இண்டர்சிட்டி, ஆகிய டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் சேதமடைந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!