ரூ.250 கோடி: உச்சம் தொட்ட டாஸ்மாக் ஒரு நாள் விற்பனை

ரூ.250 கோடி: உச்சம் தொட்ட டாஸ்மாக் ஒரு நாள் விற்பனை

1 mins read
5f06591c-7a55-4135-b628-7311a1570c53
-

சென்னை: தலை­ந­கர் சென்­னை­யில் மதுக்­க­டை­களைத் திறந்த பிறகு முதன்­மு­றை­யாக மாநி­லத்தில் டாஸ்­மாக் ஒரு நாள் விற்­பனை ரூ.250 கோடியைத் தாண்டி­உள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக தமிழகம் முழு­வ­தும் டாஸ்­மாக் கடை­கள் மூடப்­பட்­டன. அதன்­பின் இரண்டு மாதங்­கள் கழித்து சென்னை தவிர மற்ற மாவட்­டங்­களில் கடைகள் திறக்­கப்­பட்­டன.

சென்­னை­யில் தொற்று கட்டுக்குள் உள்ள நிலை­யில், 5 மாதங்­க­ளுக்­குப் பிறகு மாந­கரக் காவல் எல்­லைக்­குள் உள்ள 755 மது­பானக் கடை­களில் 720 கடை­கள் திறக்­கப்­பட்­டன.

முதல் நாள் டாஸ்­மாக் கடை­களில் கூட்­டம் குறைந்து காணப்­பட்டபோதி­லும், சென்­னை­யில் மட்­டும் 33 கோடி ரூபாய்க்கு மது விற்­ப­னை­யா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், சனிக்­கி­ழமை ஒரு நாள் மட்­டும் சென்னை உட்­பட தமி­ழ­கம் முழு­வ­தும் டாஸ்­மாக் மது­ விற்­பனை ரூ.250 கோடியைத் தாண்­டி­யுள்­ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.