துணை மின் நிலைய தீ விபத்து: உயிரிழக்கும் முன் குடும்பத்தாரிடம் கண்ணீர்மல்க விடைபெற்ற ஊழியர்கள்

துணை மின் நிலைய தீ விபத்து: உயிரிழக்கும் முன் குடும்பத்தாரிடம் கண்ணீர்மல்க விடைபெற்ற ஊழியர்கள்

1 mins read
a727be5c-8742-4ad0-aaa7-9859453c09b4
-

அம­ரா­வதி: ஆந்­தி­ரா­வில் துணை மின் நிலை­யத்­தில் நிகழ்ந்த தீ வி­பத்­தில் சிக்­கி­ய­வர்­கள் உயி­ரி­ழப்­ப­தற்கு முன் தங்­கள் குடும்­பத்­தா­ரு­டன் பேசி­யது தொடர்பான உருக்கமான தகவல்கள் தெரி­ய­வந்­துள்­ளன.

ஸ்ரீசை­லம் பகு­தி­யில் அமைந்­துள்ள அந்த துணை மின்­ நி­லை­யத்­தில் கடந்த 20ஆம் தேதி இரவு திடீர் தீ வி­பத்து ஏற்­பட்­டது. இது பூமிக்­க­டி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள மின் நிலை­யம் ஆகும்.

தீ விபத்தை அடுத்து ஊழி­யர்­கள் பலர் உடனடியாக வெளி­யே­றி­னர். சிலர் உள்­ளுக்­குள் சிக்­கினர்.

32 வய­தான சுந்­தர் நாயக் என்ற உத­விப் பொறி­யாளர் கொரோனா கிரு­மித் தொற்­றி­ல் இ­ருந்து மீண்டு கடந்த ஜூலை 25ஆம் தேதி­தான் மீண்­டும் பணி­யில் சேர்ந்­தி­ருந்­தார். இவ­ருக்கு மனை­வி­யும் இரு மகள்­களும் உள்­ள­னர்.

வி­பத்து ஏற்­பட்ட சில நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு, இரவு சுமார் 11. 30 மணிக்கு மனை­வியை கைபேசி மூலம் தொடர்பு கொண்ட சுந்தர், தாம் உயிர் பிழைப்­ப­தற்­கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தெரி­வித்­துள்­ளார். தங்­க­ளது இரு மகள்­க­ளை­யும் நன்­றா­கப் பார்த்­துக் கொள்­ளு­மாறு அவர் மனை­வி­யி­டம் கண்­ணீர் மல்க கூறியுள்ளார்.

மற்­றொரு உத­விப் பொறி­யாள­ரான மோகன்­ராவ் என்­ப­வ­ரும் தனது குடும்­பத்­தா­ரை­யும் சக ஊழி­யர் ஒரு­வ­ரை­யும் தொடர்­பு­கொண்டு தாம் மர­ணத்­தின் விளிம்­பில் இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

மின் நிலை­யம் முழு­வ­தும் அடர்ந்த புகை பர­வி­யுள்­ளது என்­றும் அரை மணி நேரத்­தில் மீட்­புக் குழு­வி­னர் தங்­களை மீட்­கா­விட்­டால் உயி­ரி­ழப்­பது உறுதி என்­றும் சீனி­வாஸ் என்பவர் தமது குடும்­பத்­தா­ரி­டம் கூறி­யுள்­ளார்.

இவர்கள் மறு­நாள் சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­னர்.