தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர்: இந்திய நாட்டின் மருத்துவ தலைநகர் தமிழகம்

1 mins read
9419803f-25f0-4d30-a7de-f403be8077fa
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

சென்னை: இந்­தி­யா­வி­ன் மருத்­து­வத் தலை­ந­க­ரா­க தமிழ்­நா­டு­ திகழ்­கிறது என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி பெரு­மை­பட கூறி­னார்.

தனி­யார் மருத்­து­வக் கல்­லூரி பட்­ட­ம­ளிப்பு விழா ஒன்­றில் காணொளி மூலம் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய முதல்­வர், சிறந்த கட்­ட­மைப்­பு­கள், அதி­ந­வீன ஆற்­றல்­கள், தலை­சி­றந்த வல்­லு­நர்­கள் ஆகி­யோ­ரைக் கொண்ட மாநி­ல­மாக தமி­ழக மருத்­து­வத் துறை திகழ்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

பல நாடு­களில் இருந்­தும் பல மாநி­லங்­களில் இருந்­தும் மிக நுண்­ணிய மருத்­துவ சிகிச்­சை­களை நாடி தமி­ழ­கம் வரு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

மருத்­து­வத் துறை­யில் பல முன்­னோடித் திட்­டங்­களைத் தமி­ழக அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது என்று குறிப்­பிட்ட பழ­னி­சாமி, மருத்­துவ மாண­வர்­க­ளின் கனவை நன­வாக்க அரசு அரும்­பா­டு­பட்டு வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

அரசு மருத்­து­வ­ம­னை­களில் புற்று­நோய்க்­குத் தலை­சி­றந்த சிகிச்சை அளிக்­கும் நோக்­கத்­தில் ரூ. 190 கோடி செல­வில் அதி­நவீன கரு­வி­கள் கொள்­மு­தல் செய்­யப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

உடல் உறுப்பு நன்­கொ­டை­யில் தமி­ழ­கம் தொடர்ந்து முத­லி­டத்­தில் இருந்து வரு­வ­தை­யும் அவர் சுட்­டி­னார். அரசு எடுத்து வரும் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளால் தமி­ழ­கத்­தில் கர்ப்­பி­ணி­கள் உயி­ரி­ழப்பு குறிப்­பி­டத்­தக்க அள­வில் குறைக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் பழ­னி­சாமி கூறினார். இதனிடையே, தமி­ழ­கத்­தில் புதி­தாக தொடங்­கப்­படும் மருத்­துவக் கல்­லூ­ரி­களில் 2021-22 ஆம் ஆண்டு முதல் மாண­வர் சேர்க்கை இடம்­பெ­றும் என்­றார் அவர்.

மத்­திய அர­சும் மாநில அர­சும் சேர்ந்து செயல்­பட்டு வரு­வ­தால் தமிழ்­நாட்­டில் புதி­தாக மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளைத் தொடங்க வழி ஏற்­பட்டு இருப்­ப­தா­க­வும் பழனி­சாமி கூறி­னார்.