அதிகமானோர் குணமடைவதன் ரகசியம்: முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

அதிகமானோர் குணமடைவதன் ரகசியம்: முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

2 mins read
fad221c2-1bb1-4510-b002-406561e98650
தமிழக முதல்வர் பழனிசாமி. கோப்புப்படம் -

கட­லூர்: இந்­திய மாநி­லங்­க­ளி­லேயே தமிழ்­நாட்­டில்­தான் கிருமி நோயா­ளி­கள் அதிக அள­வில் குண­ம­டை­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி எத­னால் அந்த முன்­னேற்­றம் ஏற்­பட்டு வரு­கிறது என்று விளக்கி உள்­ளார்.

முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி மாவட்­டந்­தோ­றும் சென்று கொரோனா கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­க­கள் மற்­றும் மாவட்ட வளர்ச்சி பணி­கள் குறித்து ஆய்வு செய்து வரு­கி­றார். சேலம், கோவை, திருச்சி, மதுரை, கிருஷ்­ண­கிரி, நெல்லை என 15 மாவட்­டங்­களில் ஆய்வு நடத்­திய அவர் நேற்று கட­லூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் ஆய்வு நடத்­தி­னார்.

கட­லூர் மாவட்­டத்­தில் நிறை­வுற்ற ரூ.25.54 கோடி­யி­லான புதிய திட்­டப்­ப­ணி­க­ளைத் தொடங்கி வைத்த முதல்­வர் பழ­னி­சாமி ரூ.32.16 கோடி­யி­லான புதிய திட்­டப்­ப­ணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி, நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார். பின்­னர் நடை­பெற்ற ஆய்­வுக் கூட்­டத்­தில் முதல்­வர் பேசி­னார். அப்­போது அவர் கூறு­கை­யில், "கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அர­சால் முழு­மூச்­சில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை, தனிக்­க­வ­னம் செலுத்­தப்­பட்டு, தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய சிகிச்­சை­ய­ளித்து அவர்­களை குண­ம­டை­யச் செய்­யும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்­குத் தேவை­யான படுக்கை வச­தி­கள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

"போதிய மருத்­துவ பரி­சோ­தனை உப­க­ர­ணங்­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன. கிரு­மித்­தொற்­றுக்கு மருத்­து­வர்­கள் சரி­யான முறை­யில் சிகிச்­சை­ய­ளித்து வரு­கின்­ற­னர்.

"இந்­திய அள­வில் அதிக பரி­சோ­த­னை­கள் செய்­கின்ற முதல் மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­கிறது. இந்­தக் கார­ணங்­கா­ளல் தொற்று பர­வல் குறைக்­கப்­பட்டு நாட்­டி­லேயே தமிழ்­நாட்­டில்­தான் குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை அதி­க­மா­க­வும் இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறை­வா­க­வும் உள்­ளது," என்று கூறி­னார் முதல்­வர்.