திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த இலியாஸ் என்பவர் ஃபேஸ்புக் வழியாக நட்பு ஏற்படுத்தினார். கடந்த ஜூலை மாதம் சிறுமியை வந்தவாசி புறவழிச்
சாலைக்கு அழைத்துச் சென்ற இலியாஸ், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தனது நண்பர்களான சூர்யா, பர்கத் ஆகியோருக்கும் இளைஞர் இலியாஸ் தகவல் தெரிவித்துள்ளார். மூன்று பேரும் சிறுமிக்கு மதுபானத்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் இலியாஸ், சூர்யா, பர்கத் ஆகியோரை போலிசார் கைது செய்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

