சென்னை: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருவதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிக் கப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோச னைக்குப் பிறகு உறுதியான அறி விப்பு வெளியாகும் என்று ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.
மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இைத நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நேற்று காலையில் மாவட்ட ஆட்சியர் களுடனும் மாலையில் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய அவர், "கொரோனா காலத்திலும் தமிழகம் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டிலேயே இந்த மோசமான காலகட்டத்திலும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
"ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு களைச் சரிசெய்வதற்காக ரூ.200 கோடி மதிப்பில் செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
"கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைக் குணப்படுத்துவதற்கு தோதாக கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
"இதுவரை கொவிட்-19 நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது.
"இந்தியாவிலேயே கொவிட்-19 ஆய்வகப் பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 75,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்நடவடிக்கைகளின் காரணமாக நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 85.45% மேல் உள்ள மாநிலமாகவும் மிகக் குறைவான, அதாவது 1.7% இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது," என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.

