கொரோனா: பல மாவட்டங்களில் கிருமித்தொற்று பாதிப்பு அதிகரிப்பு

2 mins read
a1d9fe62-d4f5-45e5-b55d-9d1f2cd5a248
சென்­னை­யில் தொற்­றுப் பர­வல் குறைந்து வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில் மாந­க­ரில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளின் எண்­ணிக்கை 45 ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதைத்தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் கொரோனா கிருமித்தொற்றுச் சோதனை முகாம்கள் அமைத்து கொவிட்-19 சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. படம்: ஏஎப்பி, அருண் -

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள பல்­வேறு மாவட்­டங்­களில் கிரு­மித் தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

இதை­ய­டுத்து நோய்த்­தொற்­றுப் பர­வல் நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தும்­படி மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு முதல்­வர் பழ­னி­சாமி அறி­வு­றுத்தி இருப்­ப­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் 6 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஒரே­நா­ளில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட முதி­யோர் கிரு­மித் தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் தமி­ழ­கத்­தில் 81,000 பேருக்கு கிரு­மித் தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன்­மூ­லம் புதி­தாக 6,352 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கம் முழு­வ­தும் 149 இடங்­களில் கொரோனா பரி­சோ­தனை ஆய்­வ­கங்­கள் செயல்­ப­டு­கின்­றன.

இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 415,590 ஆக அதி­க­ரித்­துள்­ளது. சனிக்­கி­ழ­மை­யன்று 6,045 பேர் கிரு­மித் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

இவர்­க­ளு­டன் சேர்த்து இது­வரை 355,727 பேர் பாதிப்­பி­லி­ருந்து மீண்­டுள்­ள­னர். மாநி­லம் முழு­வ­தும் தற்­போது 52,726 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

சென்­னை­யில் தொற்­றுப் பர­வல் குறைந்து வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில் மாந­க­ரில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளின் எண்­ணிக்கை 45 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே ஜெகத்­ரட்­ச­க­னைத் தொடர்ந்து மேலும் இரண்டு திமுக எம்­பிக்­கள் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நெல்லை தொகுதி திமுக எம்­பி­யான ஞான­தி­ர­வி­யத்­துக்­கும் அவ­ரது மனை­விக்­கும் தொற்று உறு­தி­யா­னதை அடுத்து கேரள மாநி­லம் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே பிர­பல தொழி­ல­தி­பர் நல்லி குப்­பு­சா­மிக்­கும் கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து அவர் தனி­மைப்­படுத்­தப்­பட்­டுள்­ளார்.

கிரு­மித் தொற்­றால் தமி­ழ­கக் காவல்­து­றை­யைச் சேர்ந்த பல­ரும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். சில அதி­கா­ரி­கள் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில் சென்­னை­யைச் சேர்ந்த காவல் துணை கண்­கா­ணிப்­பா­ளர், காவல் ஆய்­வா­ளர் உள்­ளிட்ட 16 போலி­சா­ருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது.

இது­வரை சென்­னை­யில் மட்­டும் 2,209 போலி­சார் கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­ன­தா­க­வும் இவர்­களில் 1,803 பேர் குண­ம­டைந்து பணிக்­குத் திரும்­பி­யுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நூற்றுக்கும் குறைவானோர் பலி

தமிழகத்தில் ஒரேநாளில் 87 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய தினங்களில் முதன்முறையாக பலி எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது. ஏழு வயது சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். மாநிலம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனினும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.