தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் முதல் பெண் வீரலட்சுமி: மக்கள் சேவையே மகத்தான சேவை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தில் முதன்முதலாக அவசர சிகிச்சை வாகன ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் டிவிகே நகரைச் சேர்ந்த சுப்பிரமணி-சாவித்திரி தம்பதிகளின் மகள் வீரலட்சுமி, 30. இவர், டாக்சி ஓட்டுநரான தனது கணவர் முத்துகுமாருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில், அவசர சிகிச்சை வாகனம் ஓட்டும் பணி நியமனம் குறித்து வீரலட்சுமி கூறுகையில், “மக்கள் சேவையே மகத்தான சேவை என்பதால் இந்தப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளேன். ஓட்டுநர் பணி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இப்பணியில் சேர்ந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தப் பணியில் சேர்ந்த பின்புதான் தெரிந்தது, நான்தான் தமிழகத்தின் முதல் பெண் அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர் என்பது.

“இந்த 108 வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. இதெல்லாம் எனக்கு தண்ணீர் பட்டபாடு. என்னைப்போல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளிலும் சேரவேண்டும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!