மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கின் தொடர்பில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரிகள், பினாமி தடுப் புச் சட்டத்தின் கீழ் சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான 65 சொத்துகளை முடக்கியுள்ளனர்.
இந்த சொத்துகளில் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு எதிரே கட்டிக் கொண்டிருக்கும் புதிய கட்டடமும் அடங்கும்.
அத்துடன் தாம்பரம், ஆலந்தூர், திருப்பெரும்புதூர் ஆகிய இடத்தில் உள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்து களை முடக்கினர்.
சசிகலா வரும் 28ஆம் தேதி அல்லது எதிர்வரும் ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று இரு மாறுபட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் தேர்தலுக்குமுன் அவர் நிச்சயம் விடுதலையாகி விடுவார் என்றும் அவர் ஒரு அர சியல் சக்தியாக மாறாமல் இருக்க சில காய்நகர்த்தல்கள் செய்யப் படுவதாகவும் அரசியல் விமர்சகர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.