தமிழகத்தில் கொவிட் -19 கிருமித்தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக் கையில், “ஞாயிறன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி யானது. இவர்களில் தமிழகத் தலைநகர் சென்னையில் மட்டும் 1,150 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
“இந்த 5,956 பேரையும் சேர்த்து தமிழகத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 428,041 பேராக அதிகரித்துள்ளது.
“இவர்களில் சென்னையில் மட்டும் 135,597 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
“மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இதுவரை மொத்தம் 355,727 பேர் குணம் பெற்று இல்லம் திரும்பியுள்ளனர்.
“52,578 பேர் மருத்துவமனை அல்லது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இம் மாநிலத்தில் 48,13,147 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.