சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு பிடியை சற்று தளர்த்தி நிம்மதி அளித்த கொரோனா

சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு பிடியை சற்று தளர்த்தி நிம்மதி அளித்த கொரோனா

1 mins read
347d7c54-acd2-4cd7-8192-739b1aee3183
படம்: ஏஎஃப்பி -

சென்னை மாந­க­ரில் 20 நாட்­க­ளுக்­குப் பிறகு கொரோனா கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி உள்­ளது. வியா­ழக்­கி­ழமை நில­வ­ரத்தை மாநில சுகா­தா­ரத் துறை அறி­வித்­தது.

தமி­ழ­கம் முழு­வ­தும் 5,892 பேருக்­குப் புதி­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­க­வும் 24 மணி நேரத்­தில் 92 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டு இருந்­தது.

சென்­னை­யில் ஒவ்­வொரு நாளும் ஆயி­ரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்­யப்­பட்டு வந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் அந்த எண்­ணிக்கை 968ஆகக் குறைந்­தது.

இது­வரை சென்­னை­யில் மட்­டும் 138,724 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இருப்­பி­னும் இவர்­க­ளில் 123,851 பேர் கிரு­மித்­தொற்­றில் இருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்­பி­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வியா­ழக்­கி­ழமை சென்­னை­யில் 29 பேர் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து அங்கு கிரு­மித்­தொற்­றுக்கு பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை 2,814 ஆக உயர்ந்­தது.

தமிழக மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் வரை பதிவான கிருமித்தொற்று எண்ணிக்கை 445,851. இவர்களில் 386,173 பேர் குணமடைந்துவிட்டனர். வியாழக் கிழமை மட்டும் 6,110 பேர் கிருமி அபாயத்திலிருந்து விடுபட்டு வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.