5 மாதத்துக்கு பின்பு தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள், சென்னையில் மெட்ரோ சேவை

2 mins read
f0bb800c-e030-4a6b-bfac-4fdd4361f7b7
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டு­ வரும் நிலை­யில், நாளை மறு­நாள் செப்­டம்­பர் 7ஆம் தேதி முதல் மாநிலம் முழு­வ­தும் பய­ணி­கள் ரயில்­களை இயக்க தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.இத­னைத்­தொ­டர்ந்து, தமி­ழ­கத்­திற்கு 9 சிறப்பு ரயில்­களை இயக்­க­வும் தெற்கு ரயில்வே முடிவு செய்து, அதன்­படி ரயில் விவ­ரங்­க­ளை­யும் வெளி­யிட்­டுள்­ளது.

கொரோனா தாக்­கத்­தின் கார­ண­மாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊர­டங்கு உத்­த­ரவு தமி­ழ­கம் முழு­வ­தும் நடப்பில் இருந்து வருகிறது. இருப்­பி­னும், கடந்த இரண்டு மாதங்­க­ளாக ஊர­டங்­கில் பல்­வேறு தளர்­வு­களும் அறி­விக்­கப் பட்­டன.

குறிப்­பாக, மாவட்­டங்­க­ளுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்து தொடங்­கப்­பட்­டுள்­ளது. அதோடு செப்­டம்­பர் 7 முதல் மாநி­லம் முழு­வதும் பேருந்­து­களும் பய­ணி­கள் ரயில்­களும் இயக்­கப்­பட உள்­ளன.

இதற்­கி­டையே, சென்­னை­யில் மெட்ரோ ரயில் சேவையும் செப்­டம்­பர் 7 முதல் இயங்­கும் என்று தமி­ழக அரசு கூறி­யுள்­ளது.

சென்­னை­யில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.

மெட்ரோ ரயில் சேவை விதி முறை­களின்படி, ஒவ்­வொரு நிறுத்­தத்­தி­லும் 20 நொடி­கள் மட்­டுமே நின்றுசெல்­லும் மெட்ரோ ரயில்­கள், இனி 50 நொடி­கள் நிற்­கும் என மெட்ரோ நிர்­வா­கம் கூறியுள்­ளது.

ரயில் இருக்­கை­களில் ஒரு இருக்கை இடை­வெளி விட்டு பய­ணி­கள் அம­ர­வேண்­டும்.

மக்­கள் நெரி­ச­லில் சிக்­கா­மல் சமூக இடை­வெ­ளியைக் கடைப் பிடிக்­கும் வகை­யில் இந்த அறி விப்­பு­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

சென்னை சென்ட்­ரல் - கோவை இன்­டர்­சிட்டி எக்ஸ்­பிரஸ், சென்னை -கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயில், சென்னை எழும்­பூர் - திருச்சி, கோவை - மயி­லா­டு துறை, சென்னை எழும்­பூர் - காரைக்­குடி, மதுரை, தூத்­துக்­குடிக்கு சிறப்பு ரயில்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த சிறப்பு ரயில்­க­ளுக்­கான முன்­ப­திவு இன்று சனிக்­கி­ழமை காலை 8 மணிக்கு தொடங்­கு­கிறது.

ரயில் நிலை­யத்­துக்கு வரும் அனைத்துப் பய­ணி­களும் பரி­சோ­திக்­கப்­பட்டு, அறி­குறி இல்­லா­த­வர்­கள் மட்­டுமே ரயி­லில் ஏற அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள். ரயில் நிலை­யத்­துக்­குள் நுழை­யும்­போ­தும் பய­ணத்­தி­ன்போதும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என தெற்கு ரயில்வே அறி­வித்­துள்­ளது.