ஈமு கோழி மோசடி வழக்கு; மூவருக்கு 10 ஆண்டு சிறை

1 mins read
b747a0ed-5077-4816-abcb-d8b7a86ea4c5
படம்: ஊடகம் -

கோவை: கோவை­யில் ஈமு கோழிப் பண்­ணையை நடத்தி, பொது மக்­க­ளின் பணத்தை மோசடி செய்த மூவ­ருக்கு தலா 10 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்­ற­வா­ளி­கள் பத்­ம­நா­பன், ஜெயக்­கு­மார், ராஜ­சே­க­ரன் ஆகிய மூவ­ருக்­கும் தலா 10 ஆண்­டு­கள் சிறை­யும் மொத்­த­மாக ரூ.58 லட்­சம் அப­ரா­தம் செலுத்­த­வும் கோவை தமிழ்­நாடு முதலீட்­டா­ளர்­கள் சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த வழக்­கின் இறு­தித் தீர்ப்பு வழங்­கப்­பட்­டபோது, பத்­ம­நா­பன், ராஜ­சே­க­ரன் ஆகிய இரு­வர் மட்­டுமே நீதி­மன்­றத்­தில் முன்­னிலை ஆகி­னர். தலை­ம­றை­வான ஜெயக்குமா­ருக்கு கைதாணை பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது.

கோவை மாவட்­டம், கிணத்­துக் கடவு பகு­தி­யில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜேப்­பி­யார் என்ற ஈமு கோழிப் பண்ணையை ஜெயக்­குமார், பத்­ம­நா­பன், ராஜ­சே­க­ரன் ஆகிய மூவ­ரும் நடத்தி வந்தனர்.

"தங்­கள் நிறு­வ­னத்­தில் முத­லீடு செய்­தால் அதிக வட்டி கிடைக்­கும் என்ற ஆசைவார்த்தைகளைக் கூறி விளம்­ப­ரம் செய்த இவர்­களை நம்பி, கோவை, திருப்­பூர், ஈரோடு உள்­ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்­கள் ரூ.1.66 கோடியை முத­லீடு செய்­த­னர்.

ஆனால், மூவ­ரும் தாங்­கள் சொன்­ன­படி பணத்ை­தத் தராமல் மோசடி செய்த­தால் பொது­மக்­கள் போலி­சில் புகார் அளித்­த­னர்.

இதைத்தொடர்ந்து ஜெயக்­குமார், ராஜசேகரன், பத்­ம­நா­பன் ஆகியோர் கைதா­கி­னர்.

இந்த மூவ­ரும் விசாரணையின்­போது நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்ற நிபந்­த­னை­யு­டன் நீதி­மன்ற பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.