பாண்டியராஜன்: அக்டோபரில் கொரோனா பரவலின் 2வது அலை

பாண்டியராஜன்: அக்டோபரில் கொரோனா பரவலின் 2வது அலை

1 mins read
adfe0461-c751-4fc5-8f5d-1ecdb604a945
படம்: ஏஎஃப்பி -

பூந்­த­மல்லி: வரும் அக்­டோ­பரில் கொவிட்-19 கிரு­மிப்பரவ­லின் 2வது அலை வரும் என சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்துள்ளனர்.

இந்த அச்சத்தில் இருந்து மக்­களைப் பாதுகாக்க தமி­ழக அர­சு முனைப்­பு­டன் செய­லாற்றி வரு­வதாக அமைச்­சர் பாண்­டி­ய­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

"நாம் விழிப்­பு­ணர்­வு­டன் பாது காப்­பாக இல்­லா­மல் அலட்­சி­ய­மாக இருந்­தால் அக்­டோ­ப­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றின் 2வது அலை சுனா­மி­ போல் பல்­கிப் பெருகி மக்­க­ளைப் பாதிப்­பதை யாரா­லும் தடுக்­க­மு­டி­யாது," என்றார் அமைச்சர்.

திரு­வேற்­காட்டில் ரூ.97 லட்­சத்­தில் கட்­டப்­பட்ட புதிய நக­ராட்சிக் கட்­ட­டத்தை முதல்­வர் பழ­னி­சாமி காணொளி வழி திறந்துவைத்தார்.

அதனை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்­சர் பாண்­டி­ய­ரா­ஜன், நகராட்­சி­யால் பயன்­ப­டுத்­தப்­படும் குப்­பை­களை அள்­ளும் பேட்­டரி வாக­னங்­களை பச்­சைக்கொடி காட்டி தொடங்கிவைத்­தார்.

அதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அமைச்­சர், "சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மெத்­த­னமாக எடுத்துக்கொண்டால் அக்­டோ­ப­ரில் கொரோ­னா­வின் 2வது அலை வரு­வதை யாரா­லும் தடுக்­க­மு­டி­யாது. ஆனாலும், "கொரோ­னாவை விரட்டி அடிக்­கும் பணி­யில் தமி­ழ­கம் முன்­ன­ணி­யில் உள்­ளது.

"எம்ஜிஆர் தோற்­றத்­தில் நடி­கர் விஜய்யை அவ­ரது ரசி­கர்­கள் தங்­களது விருப்­பத்­தின் பேரில் சுவ­ரொட்­டி­யாக ஒட்டி உள்­ள­னர். அதில் நான் கருத்துச் சொல்லமுடி­யாது. எம்ஜிஆர், ஜெய­ல­லிதா பெயரைச் சொல்லி அவர்­கள் வாக்கு கேட்டு போகாத வரை எந்தப் பிரச்­சி­னை­யும் இல்லை. ஏனெனில், அவர்­க­ளின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்­கும் உரிமை எங்­க­ளுக்குத் தான் உள்­ளது," என்றார்.