மதுரை: மதுரையில் இயங்கும் 50% அரசுப் பேருந்துகளில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஏனெனில், அந்த அளவுக்கு மக்களை நிறைத்துக்கொண்டு பேருந்துகள் செல்வதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான பேருந்துகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாததால் பேருந்துகள் மூலம் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பேருந்தில் 60% பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில நேரங்களில் 100% பயணிகள் பேருந்தில் ஏறிவிடுகின்றனர்.
நடத்துநர்களின் பேச்சையும் அவர்கள் கேட்பதில்லை. மீறி கட்டுப்படுத்தினால் நடத்துநர், ஓட்டுநருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன், பேருந்தின் பின் படிக்கட்டு வழி ஏறி முன் படிக்கட்டு வழியே பயணிகள் இறங்குவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் இருக்கை யில் அமர்வது என பெரும்பாலான பேருந்துகளில் இவை எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

