சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை விரைவில் 5 லட்சத்தை நெருங்க உள்ளது.
ஆனால், இந்த அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து இருந்தாலும் உயிரிழப்புகள் கடந்த சில தினங்களாகக் குறைந்து வருவதாகவும் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த கொரோனா பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, "வியாழன் அன்று ஒரேநாளில் மேலும் 5,528 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டனர். இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 486,052 ஆக அதிகரித்துள்ளது.
"தமிழகத்தில் வியாழனன்று கிருமி பாதிப்பால் மேலும் 64 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது.
"கொரோனாவில் இருந்து வியாழனன்று 6,185 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதன்மூலம், மொத்தம் 429,416 பேர் குணமடைந்துள்ளனர்.
"சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று இருந்தது. இவர்களுடன், சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145,606 ஆக உயா்ந்துள்ளது.
"சென்னையில் குணமடைந்தோா் எண்ணிக்கை 131,840 பேராகவும் உயிரிழப்பு 2,921 ஆகவும் உயா்ந்துள்ளது.
"தமிழகத்தில் 163 பரிசோதனை மையங்கள் உள்ளன. வியாழனன்று ஒரேநாளில் 85,473 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இதுவரை 56,30,323 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
"இதுவரை பாதிக்கப்பட்டவா்களில் 0-12 வயதுடையவா்கள் 21,399 போ். 13-60 வயதுடையவா்கள் 401,255 போ். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 63,398 போ்," என்று சுகாதார அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கொடிய கிருமித் ெதாற்றை குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

