மதுரை: காதல் மனைவி மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் போல், ஆங்காங்கே காதல் கணவர்கள் பலரும் தங்கள் மனைவிக்காக கோவில்களையும் சிலைகளையும் வடித்து வருகின்றனர்.
அண்மையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ெதாழிலதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா தனது மனைவிக்காக சிலை வைத்தார்.
அவரைப்போன்றே மற்றொரு நவீன கால ஷாஜகானாகக் கருதப் படும் சேதுராமன் என்பவரும் 6 அடி உயரம் கொண்ட தனது மனைவியின் சிலையைத் தத்ரூபமாக வடித்து வீட்டில் வைத்துள்ளார்.
மதுரை, மேல பொன்னநகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சி.சேதுராமன், 74, தனது மனைவி இறந்த 30வது நாளில் அவரது சிலையை மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சிற்பி பிரசன்னா, ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு வடிவமைத்துள்ளார்.
இவரது மனைவி பிச்சைமணி, 68, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 48 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி களுக்கு மூன்று மகள்கள். அனை வருக்கும் திருமணமாகி விட்டது.
சிலை வைத்தது குறித்து சேதுராமன் கூறுகையில், "என்னுடைய சிரமகாலத்திலும் மகிழ்ச்சி யான நாட்களிலும் 48 ஆண்டுகள் உடனிருந்த மனைவியின் மறைவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் இல்லாத வீட்டைப் பார்க்கவே வேதனையாக இருந்தது. எனவே, வீட்டில் அவருக்கு சிலை வைத்தேன்.
"இந்த சிலையை பார்க்கும்போதெல்லாம் எனது மனைவி என்னுடன் இருப்பது போலவே உணருகிறேன். தினமும் காலையில் அவரை வணங்கிய பிறகுதான் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவேன்," என்றும் அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் அவர்களின் மாமியார்தான் இந்த பிச்சைமணி என்று கூறப்படுகிறது. பிச்சைமணியை அவரது உறவினர்களும் மலர்தூவி வழிபட்டனர்.
மனைவி பிச்சைமணி இறந்து 30 நாட்களான நிலையில், அவ ரைப்போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்ட ஃபைபர் சிலையை வீட்டில் வைத் துள்ளார் சேதுராமன். தினமும் இவர் மனைவியைக் கும்பிட்டுத் தான் பணியைத் தொடர்கிறார்.
படங்கள்: தமிழக ஊடகம்

